மர்மமான முறையில் இறந்து கிடந்த 20 வயது விமானப் பணிப்பெண்!!

542

இந்தியாவில் விமான நிறுவனத்தில் பணிப்பெண்ணாக இருந்த 20 வயது இளம்பெண் அடுக்குமாடி குடியிருப்பில் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேகாலயா தலைநகரான ஷில்லாங் பகுதியைச் சேர்ந்தவர் கோங்கிஸ்ட் கிளாரா பன்ஷா ராய்(20). தனியார் விமான நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வரும் இவர், கொல்கத்தா நகரின் கேஷ்டோபூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டில் நேற்று இரவு முதல் காலை வரை மது விருந்து நடந்துள்ளது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்தளத்தில் இவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்ட சிலர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் உடலை கைப்பற்றி, பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ள பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டின் ஜன்னல் வழியாக அவர் கீழே குதித்தோ, விழுந்தோ உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.