வவுனியாவில் யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25 ஆவது ஆண்டு நிறைவு விழா!!

584

 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா வவுனியா வளாகத்தில் முதல்வர் த.மங்களேஸ்வரன் தலைமையில் இன்று (17.08.2017) காலை 10 மணிக்கு பம்பைமடுவில் உள்ள வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே விஞ்ஞான, கணித பாடங்களில் நடத்தப்பட்ட புதிர் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வவுனியா வளாகத்தில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற முதல்வர்கள், உத்தியோகத்தர்கள் கௌரவிப்பு, கலை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல, விஷேட விருந்தினராக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மோகன்லால் கிரேரே, வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, காதர் மஸ்தான், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.