வவுனியாவில் புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞரணியின் சார்பான வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் நேற்று (17.08.2017) புளொட் அமைப்பின் இளைஞரணியின் செயலாளர் சு.காண்டீபன் தலைமையில் வவுனியா பாலமோட்டை பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் வாழ்வாதார உதவியினை புளொட் அமைப்பின் லண்டன் கிளை இளைஞரணி உறுப்பினர் எ.முரளிதரனின் ஒழுங்கமைப்பில் அவரின் தந்தை அமரர் திரு.சுப்பிரமணியம் எதிர்வீரசிங்கம் அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய வாழ்வாதார உதவியினை புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகரபிதாவுமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) , புளொட் அமைப்பின் வவுனியா முன்னாள் நகர சபையின் உறுப்பினர் திரு.பார்த்தீபன், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் திரு.லம்போதரன், ஆசிரியர் திரு சுதர்சன், பாலமோட்டை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொருளாளர் திரு.சுகுமார், புளொட் இளைஞரணியின் பொருளாளர் த.நிகேதன், புளொட் இளைஞரணி மற்றும் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் வ.பிரதீபன், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் உப தலைவர் பி.கெர்சோன், புளொட் இளைஞரணின் உறுப்பினர்களான திரு. கஜீபன்,
திரு. இந்துஜன், திரு சன்சைன், திரு.ரூபன், திரு. லில்ஷென் ஆகியோருடன் கிராம மக்களும் கலந்து வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.














