திருமண பந்தத்தில் இணையும் மாற்றுப் பாலின காதல் ஜோடி!!

613

கேரளாவைச் சேர்ந்தவர் திருநம்பி ஆரவ் அப்புகுட்டன். 46 வயதான ஆரவ் அப்புகுட்டனின் இயற்பெயர், பிந்து. சிறுவயதில் இவருடைய உடம்பில் ஆணுக்கான அறிகுறிகள் தோன்றியதையடுத்து ஆணாக மாறிவிட்டார்.

அதேபோன்று பெங்களூரைச் சேர்ந்த 22 வயது திருநங்கை சுகென்யா கிருஷ்ணனும் சந்துவாக இருந்து, சுகென்யா கிருஷ்ணனாக மாறியவர். சுகென்யாவின் வீட்டில் இவரை ஒதுக்கிவைத்துவிட, இவரை ஒரு வளர்ப்புத் தந்தை வளர்த்து ஆளாக்கினார். இவர், தனது வளர்ப்புத் தந்தையின் உதவியுடன் சத்திர சிகிச்சைக்காக மும்பை சென்றுள்ளார்.

ஆனால் 18 வயதுக்குப் பின்னர் தான் சத்திர சிகிச்சை செய்துகொள்ள முடியும் என மருத்துவர் கூறியதால், பெங்களூருக்கு வந்து அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்துள்ளார்.

ஆரவ் அப்புகுட்டன் சத்திர சிகிச்சைக்காக மும்பை செல்ல, அங்குள்ள மருத்துவர் சுகென்யாவைப் பற்றிக் தெரிவித்துள்ளனர். உடனே ஆரவ், சுகென்யாவைப் பார்க்க பெங்களூரு சென்றுள்ளார். இருவருக்கிடையே நட்பு வளரத் தொடங்கி, நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

தற்போது இருவரும் அவர்களது ஆண்,பெண் உறுப்புகளை ஒருவருக்கொருவர் மாற்றி சத்திர சிகிச்சை செய்துள்ளனர். அடுத்த மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாம்.