இந்தியாவில் பள்ளி மாணவி ஒருவர் தனது கைகளால் மனிதக்கழிவை அள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேசத்தின் சாத்பூரில் உள்ள பள்ளியில் போதிய கழிப்பிடம் வசதி இல்லாததால் அப்பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தியுள்ளார்.
இதனால் கோபமடைந்த தபாங்க் பாப்பு சிங் என்பவர் அந்த மாணவியையே மலக்கழிவை அள்ளும் படி கூறியுள்ளார்.
அந்த மாணவியும் அள்ளியுள்ளதால், அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், தபாங்க் பாப்பு சிங் மீது பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






