வவுனியாவில் அதிரடிப்படையினரால் செயலிழக்க வைக்கப்பட்ட குண்டுகள்!!

524

விடுதலைப் புலிகள் செயற்பாட்டு ரீதியாக இயங்கிய காலத்தில் புதைத்து வைத்த குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் செயலிழக்க வைத்துள்ளனர்.

வவுனியா மூன்றுமுறிப்பு பிரதேசத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள், கைக்குண்டுகள் மற்றும் கிளேமோர் குண்டுகள் என்பன அண்மையில் தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து குறித்த குண்டுகளை செயலிழக்க வைப்பதற்கு அனுமதி கோரி பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்றைய தினம் குறித்த குண்டுகளை செயலிழக்க வைப்பதற்காக விசேட அதிரடிப் படையினரின் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் புதைக்கப்பட்டும் மறைத்து வைக்கப்பட்டும் இருந்த நிலையில் பல்வேறு கட்டங்களில் கண்டெடுக்கப்பட்ட குண்டுகள் மொத்தமாக இன்றைய தினம் செயலிழக்க வைக்கப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.