நண்பனை கொலை செய்த சிறுவன் : அதிர்ச்சிக் காரணம்!!

1043

தனது செல்போனை உடைத்த காரணத்தால் நண்பனை கொலை செய்த சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்த மாஜித் முகமது என்ற மாணவனும், அபுல் கலாம் ஆசாத் என்ற மாணவனும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு அபுல் கலாம் ஆசாத்தின் செல்போனை மாஜித் முகமது உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இதனிடையே இருவரும் நாச்சிகுளம் ரயில்வே கேட் அருகே சந்தித்தபோது தகராறு ஏற்பட்டு மாஜித் முகமதை கழுத்தை நெறித்து அப்துல் கலாம் ஆசாத் கொலை செய்துள்ளார்.

தகவல் அறிந்து சென்ற பொலிசார் மாஜித் முகமதின் உடலை கைப்பற்றி, அபுல் கலாம் ஆசாத்தை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.