வயதான அரேபியர்களுக்கு சிறுமிகள் விற்பனை செய்த போலி திருமண கும்பல் சிக்கியது!!

532

 
ஐதராபாத்தில் பணத்திற்காக வயதான அரேபியர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக ஐதராபத் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 ஓமான் நாட்டவர்கள், 3 கட்டார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளையும் கைது செய்துள்ளனர்.

திருமணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 சிறுமிகள் இந்த கொடூரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.