உலகில் அதிகூடிய எடை கொண்ட பெண் உயிரிழந்துள்ளார். மும்பையில் உடல் எடைகுறைப்பு சிகிச்சை மேற்கொண்ட எமான் அகமது என்ற 37 வயதுடைய பெண்ணே டுபாயிலுள்ள வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
எமான் அகமது(வயது 37) என்ற வெளிநாட்டு பெண் உலகின் மிகவும் பருமனான பெண்ணாக கருதப்படுபவர்.
கடந்த பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி உடல் எடைகுறைப்பு சிகிச்சைக்காக மும்பைக்கு தனிவிமானம் மூலம் கொண்டுவரப்பட்டார்.
அச்சிகிச்சையில் 504 கிலோவில் இருந்து 242 கிலோவிற்கு அவரது எடை குறைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கடந்த மே மாதம் 4 ஆம் திகதி அவர் மும்பையில் இருந்து எமிரெட்ஸ் சென்று சிகிச்சைப் பெற்றார். சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.








