கடந்தவாரம் மாத்தறையில் நடைபெற்ற 43வது தேசியமட்ட விளையாட்டு விழாவில் வடமாகாணம் 8வது இடத்தை பெற்றுள்ளது. அந்தவகையில் வடமாகாணத்திற்கு 20 பதக்கங்கள் கிடைத்துள்ளன.
வடமாகாணம் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த வீரர்களால் குத்துசண்டை போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்கள் பெறப்பட்டது.
M.நிக்ஸன் ரூபராஜ் 91kg பிரிவிலும் S.கேசவன் 81kg பிரிவிலும் 2 வெண்கல பதக்கங்களை பெற்று தேசிய மட்டத்தில் வவுனியாவை பிரபல்யம் அடையவைத்துள்ளனர்.
இவர்களுடைய வெற்றிக்கு காரணமாக இருந்த பயிற்றுவிப்பாளர் Suranga Mudannayake அவர்களுக்கும் கழக நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.






