வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

711

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (28.09.2017) காலை 7.30 மணியளவில் 1 கிலோ 8 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி மகிந்த அவர்களின் தலமையில் உப பொலிஸ் பரிசோதகர் தினேஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பொலிஸ் அலுவலர்களாக அனுர 43210 , பண்டார 14957 , பிரதீப் 45980 , குமார 66701 ஆகியோரினால் கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி இ.போ.ச பேரூந்தில் 1கிலோ 8கிராம் கேரள கஞ்சாவினை கொண்டு சென்ற செய்யது முகமது மொய்தீன் (வயது – 60) என்பவறை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை வவுனியா மத்திய பேரூந்து நிலையில் 130 கிராம் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த பூநகரி இராணுவ முகாமைச் சேர்ந்த நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.