வவுனியா தூய சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா!!

1182

 
வவுனியா சகாயமாதாபுரம் பகுதியிலுள்ள தூய சதா சகாய மாதாவின் வருடாந்த திருவிழா திருப்பலி வழிபாடுகள் நேற்று (27.09.2017) காலை 7 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மூன்று தினங்கள் நவநாள் வழிபாடுகள் இடம்பெற்று நேற்று (27.09.2017) காலை 7 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு சகாயமாதாபுரம் விழியாக தூய சதா சகாய மாதாவின் திருச்சொரூபம் பவனி வந்து மாதாவின் ஆசீர்வாதத்துடன் நிறைவுற்றது.

பங்குத்தந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் உதவிப்பங்குத்தந்தை, அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடனும் பங்குமக்களின் இறை அன்புடனும் சிறப்புற இடம்பெற்றது.