இங்கிலாந்து அரண்மனைக்குள் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர்!!

600

palace

இங்கிலாந்தின் அரச குடும்பத்தினர் வாழும் வரலாற்று பெருமை மிக்க பக்கிங்காம் அரண்மனை லண்டன் நகரில் உள்ளது.
இந்த அரண்மனையின் பிரமாண்டத்தையும் உள்ளே அமைக்கப்பட்டுள்ள அழகிய பூந்தோட்டத்தையும் கண்டு களிக்க உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில தினங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

இதன்படி நேற்று எராளமான மக்கள் அரண்மனையின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அரண்மனை வடக்கு வாயில் வழியாக கத்தியுடன் நுழைந்த 44 வயது மதிக்கத்தக்க ஒருவரை லண்டன் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபரை ரகசிய இடத்தில் வைத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம் இந்த அரண்மனைக்குள் நுழைந்து திருட முயன்றதாக 2 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்..

இச்சம்பவத்தையடுத்து அரண்மனையின் காவல் பலப்படுத்தப்பட்டது. இதற்கு 2 நாட்கள் கழித்து ராணி எலிசபத்தின் மகன் அண்ட்ரூவை வாசலில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அடையாள அட்டையை காட்டிய பின்னரே அவரை உள்ளே அனுமதித்தனர்.

நேற்றைய சம்பவம் நடைபெற்றபோது ராணி அரண்மனையில் இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த 1982-ம் ஆண்டு சுவர் ஏறி குதித்த மைக்கல் பேகன் என்பவன் ராணி உறங்கிக் கொண்டிருந்த அறையில் சுற்றித் திரிந்தபோது காவலர்களிடம் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.