திருமணமான 18 நாளில் காவலர் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த காவலர் தங்கசாமி காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
இதுகுறித்து சிறப்பு காவல் படை பொலிசார் கூறுகையில், கடந்த 15ம் திகதி தான் தங்கசாமிக்கும், அனுசுயா என்ற ஆசிரியைக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக தங்கசாமி விடுமுறையில் சென்றிருந்த நிலையில் திருமணத்துக்குப் பிறகு சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் சேர்த்தோம். தற்போது, அவர் மூளைக் காய்ச்சல் காரணமாக இறந்ததாக மருத்துவமனை தரப்பில் சொல்லப்படுகிறது. அவரது இறப்பு எங்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என தெரிவித்துள்ளனர்.






