வவுனியா சாம்பல்தோட்டம் பகுதியில் நேற்று (03.10) இரவு 8.30 மணியளவில் கேரள கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நால்வரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் பகுதியிலிருந்து சூடுவந்தபுலவு நோக்கி பயணித்த நபர்களிடம் கேரளா கஞ்சா இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நெளுக்குள பொலிஸ் பொறுப்பதிகாரி எ.எம்.எஸ்.அத்தநாயக்க தலைமையிலான பொலிஸ் சாஜன் திலகரத்ன (21124), பொலிஸ் கொஸ்தாபில்களான நிறோசன் (88567), சுரவீர (89437) ஆகிய குழுவினர் குறித்த நபரை சாம்பல்தோட்டம் பகுதியில் வைத்து சோதனையிட்ட போது உடமையுடன் மறைத்து வைத்திருந்த கேரளா கஞ்சா பொதியினை கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நபர்கள் 24,26,27,39 வயதுடையவர்கள் எனவும் எங்கிருந்து இவர்கள் கஞ்சாவினை பெற்றுக்கொண்டார்கள் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினுடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.






