வறுமையிலும் சாதனை படைத்த மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

807

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. வெளியான முடிவுகளின்படி பின்தங்கிய பிரதேசங்கள் பலவற்றிலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அதன்படி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட திக்கோடை கணேச மகாவித்தியாலய மாணவி கதிரவன் விபுணா 186 புள்ளிளைப்பெற்று போரதீவுக் கல்விக்கோட்டத்தில் முதலாம் இடத்திலும் மாவட்டத்தில் ஒன்பதாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

மிகவும் பின்தங்கிய கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த மாணவி விபுணாவின் தந்தை கதிரவன் விவசாயத்தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்.

வறுமையை பொருட்படுத்தாமல் சாதனை படைத்த மாணவியை பலரும் தமது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த மாணவிக்கு ஆசிரியை சாந்தநிதி அற்புதராஜா கற்பித்தல் செயற்பாடுகளில் வழிகாட்டியாக முன்னின்று செயற்பட்டுள்ளார்.

சாதனை படைப்பதற்கு வறுமை ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள இம் மாணவி பல மாணவர்களுக்கும் எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றார்.