வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று (06.10.2017) பாடசாலையின் அதிபர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பாடசாலை மாணவர்களினால் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து அவர்களுக்கு கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் மாணவர்களினால் கவிதை, பாடல்கள் , நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாடசாலை அபிவிருத்திக்குழு உறுப்பினர்களும் பழைய மாணவர்களும் இணைந்து ஆசிரியர்களுக்கு மதிய போசனமும் நினைவுப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிக்காத வண்ணம் இந் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.














