வவுனியா பூவரசங்குளம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன.
கல்லூரியின் அதிபர் த.தர்மகடாட்சம் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, சிறப்பு நிகழ்வாக வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் மாணவரின் மனப்பாங்கு விருத்தியில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்துவோர் ஆசிரியர்களா? பெற்றோர்களா? என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்கள் பங்கு கொண்ட பட்டிமன்றமும் இடம்பெற்றது.
இந்நிலையில் குறித்த நிகழ்வின்போது வவுனியா தெற்கு கல்வி வலய ஆசிரியர் வளநிலைய முகாமையாளர் வீ.பரஞ்சோதி பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















