வவுனியாவில் வடமாகாண ஓய்வூதியர் தினம் அனுஸ்டிப்பு!!

831

 
வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் நேற்று (08.10.2017) காலை 9.30 மணியளவில் வடமாகாண ஓய்வூதியர் தினம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ரோகன புஸ்பகுமார தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் , கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் , ஓய்வூதிய திணைக்கள கணக்காளர் , மன்னார் மாவட்ட பிரதம கணக்காளர் செல்வரட்ணம் , முல்லைத்தீவு மாவட்ட பிரதம கணக்காளர் ரெனினோட் , வவுனியா மாவட்ட பிரதம கணக்காளர் பாலகுமார், வவுனியா மாவட்ட செயலக உதவி செயலாளர் கமலதாசன், ஓய்வூதிய திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , ஓய்வூதியம் பெற்ற முதியோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் முதியோர்களின் பேச்சு போட்டி , பரிசளிப்பு நிகழ்வு , முதியோர் கௌரவிப்பு , விருந்தினர்கள் உரை என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.