​வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டையில் வாள்வெட்டுச் சம்பவம் : மூவர் வைத்தியசாலையில்!!

1200

 
வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் இன்று (13.10.2017) மாலை 3 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் பாடசாலைக்கு அருகே இன்று மதியம் புதியசின்னகுளம் மற்றும் நொச்சி மோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள்வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்த ஒமந்தை பொலிஸார் வாள்வெட்டில் காயமடைந்த மயூரன் (வயது 29), நிதர்சன் (வயது 22), சங்கீதன் (வயது 38) ஆகியோரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட காட்டுக்கத்தி, முள்ளுக்கம்பி, கத்திகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக ஒமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தற்போது சம்பவ இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.