வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்றுகூடல்!!

240

 
வவுனியா விநாயகபுரம் சிவம் அறநெறிப் பாடசாலையின் விசேட ஒன்றுகூடல் நேற்று (15.10.2017) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

அறநெறி மாணவர்களின் பஞ்ச புராண இசைத்தலுடன் ஒன்றுகூடல் நிகழ்வு ஆரம்பமானது.

இதன்போது விசேட விருந்தினராக கலைமகள் நற்பணி மன்றத்தின் தலைவரும் வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தின் இணைப்பாளருமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் கலந்து சிறப்பித்தார்.

இங்கு சேவை அடிப்படையில் கற்பித்து வரும் ஆசிரியருக்கும் இதன்போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் விசேட விருந்தினராக வருகைதந்திருந்த பா.சிந்துஜன் தன் சார்பில் தனிப்பட்ட கொடுப்பனவொன்றினையும் வழங்கி வைத்தார்.

தொடந்து கிராம அபிவிருத்திச் சங்க செயலாளர் திரு.செல்வம் மற்றும் அறநெறி ஆசிரியரால் அவர்களினால் அறநெறி கல்வி பற்றியும் சைவசமய சிறப்பு பற்றியும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.