மாவட்டமட்ட முதியோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட சமூகசேவை அலுவலகத்தால் நடாத்தப்பட்டுவரும் பொதுஅறிவு வினாடிவினாவின் இறுதிப்போட்டியில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியை எதிர்த்து பண்டாரிகுளம் விபுலானந்தாக்கல்லூரி போட்டியிடவுள்ளது.
வவுனியா பாடசாலை மாணவர்கள் மத்தியில் முதியோர் விழுமியப்பண்புகளை உணர்த்தவும் பொது அறிவுத்தேடலை அதிகப்படுத்தவும் மாவட்ட சமூகசேவை அலுவலகம் வருடாந்தம் முதியோர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மத்தியில் நடாத்துகின்ற பொது அறிவு வினாடி வினாப் போட்டி இன்று (16.10.2017) வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் இரண்டாம் சுற்றுப்பொட்டி நடைபெற்றது.
முதல் சுற்றுப் போட்டிகளில் பல பாடசாலைகள் பங்குபற்றி இரண்டாம் சுற்றுக்கு 8 அணிகள் தெரிவாகின.
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, வவுனியா மத்திய மகா வித்தியாலயம், சைவப்பிரகாச மகளிர் கல்லூரி , விபுலானந்தாக்கல்லூரி, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம், பாவற்குளம் கனேஸ்வரா வித் தியாலயம் , பூவரசங்குளம் மகாவித்தியாலயம், புதுக்குளம் மகாவித்தியாலயம் ஆகியன இன்று கால் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றின.
இதில் விபுலானந்தாக்கல்லூரி, இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச மகளிர் கல்லூரி, நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயம் என்பன அரைஇறுதிக்கு தெரிவாகின.
அரை இறுதிப்போட்டியில் சைவப்பிரகாச மகளிர் கல்லூரியுடன் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி போட்டியிட்டு இறுதிப்போட்டிக்கு தெரிவாகியது. பண்டாரிகுளம் விபுலூனந்தாக்கல்லூரி நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்துடன் போட்டியிட்டு இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
மூன்றாம் இடத்தை சைவப்பிரகாச மகளிர் கல்லூரி கலைமகள் வித்தியாலத்துடன் போட்டியிட்டு பெற்றுள்ளது.
இறுதிப்போட்டி மாவட்டமட்ட முதியோர் விழா அன்று வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
போட்டிகளை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் நெறிப்படுத்த மத்தியஸ்தர்களாக எஸ்.கே.வசந்தரூபன், தி.கலைவாணி திரு. நிப்ராஸ் ஆகியோர் கடமையாற்றினர் .













