வவுனியாவில் 20 பேர் பொலிசாரால் அதிரடியாகக் கைது : காரணம் என்ன?

879

வவுனியா ஒமந்தை நொச்சிமோட்டை பகுதியில் கடந்த 13.10.2017 அன்று மதியம் புதிய சின்னகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கும் நொச்சிமோட்டை பகுதியை சேர்ந்த இளைஞர் குழுக்களுக்கிடையே ஏற்ப்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறி வாள் வெட்டுச் சம்பவத்தில் முடிவடைந்தது.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சின்னப் புதுக்குளம் பகுதியை சேர்ந்த 15 நபர்களையும் நொச்சிமோட்டையை சேர்ந்த 5 நபர்களையும் ஒமந்தை பொலிஸார் நேற்றையதினம் (15.10.2017) கைது செய்து இன்று (16.10.2017) வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய சமயத்தில் குறித்த 20 நபர்களையும் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

 
 
 

தொடர்புபட்ட செய்தி :

​வவுனியா ஓமந்தை நொச்சிமோட்டையில் வாள்வெட்டுச் சம்பவம் : மூவர் வைத்தியசாலையில்!!

வவுனியாவில் கடைக்குள் புகுந்து 50க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் அட்டகாசம்!!