வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெறும் கந்தசஸ்டி பெருவிழா!!

1465

 
வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் வருடந்தோறும் இடம்பெறும் கந்தசஸ்டி பெருவிழா இவ்வருடமும் சிறப்பாக நடைபெறுகிறது.

ஆலயகுரு பிரம்ஸ்ரீ வேத சரண்ய புரீஸ்வரக்குருக்கள் தலைமையில் கிரியைகள் ஆறு தினங்களும் காலை மாலை என இருவேளையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் திரு.சுப்ரமணியம் செயலாளர் திரு.ஜெகதீஸன் பொருளாளர் திரு.பாஸ்கரன் உட்பட அதன் உறுப்பினர்கள் இணைந்து விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

தினமும் கந்த புராணப்படிப்பு, சிறப்பு தொடர் சொற்பொழிவு, பஜனை என்பன இடம்பெறுகின்றன. இன்தமிழ் இனியன் செ.ஸ்ரீநிவாசன் முருகப் பெருமானின் சிறப்புகள் பற்றி ஒவ்வொரு நாளும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவாற்றி வருகின்றார்.

25.10.2017 புதன்கிழமை மாலை 3 மணிக்கு சூரசம்ஹாரம் விமர்சையாக இடம்பெறவுள்ளது. நேரடி அஞ்சல், கரகாட்டம், பொம்மலாட்டம் என பல சிறப்புகளுடன் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.