வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி மக்களுக்கு ஆபத்து!!

885

பம்பலப்பிட்டிய மற்றும் வெள்ளவத்தை எல்லையை பிரிக்கும் ஏரியில் மனிதர்களை உண்ணும் ஆபத்தான முதலைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஏரிக்கு அருகில் சென். பீட்டர் பாடசாலையின் மைதானமும் உள்ளது. இதனால் இந்த ஏரியில் உள்ள முதலைகளினால் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த எல்லையில் அதிகமான வீடுகள் உள்ளது. வீடுகளில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளிடம் பொது மக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.