வவுனியா மாவட்ட செயலகத்திற்குள் புகுந்த வெள்ளம்!!

544

 
வவுனியாவில் நேற்று (25.10) மாலை பெய்த கடும் மழை காரணமாக மாவட்ட செயலகத்திலுள்ள பல திணைக்களங்களுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பணியாளர்கள் பணிகள் மேற்கொள்ள முடியாமல் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இதனைச்சீர் செய்து தருமாறும் பல தடவைகள் கோரியபோதும் உரியவர்கள் அக்கறை எடுக்கவில்லை என்றும் இனிவரும் காலம் மழைகாலமாவதால் இதனைச்சீர் செய்து தருமாறும் பணியாளர்கள் கோரியுள்ளனர்.

மக்கள் சேவை நிலையங்களான மாவட்ட செயலகத்திற்கு சேவைகளைப் பெறச் செல்லும் மக்கள் இதனால் பல அசெகரியங்களுக்கும் முகம் கொடுக்க நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.