திருவள்ளூர் மாவட்டத்தில் தன் இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் பெருமாள்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, இவருக்கு இலக்கியா, ஸ்ரீஜா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் வேப்பம்பட்டு ரயில் நிலையம் வந்த சரஸ்வதி இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டார்.
இத்தகவல் ரயில்வே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டவுன், விரைந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றினர்.
முதற்கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.






