நடிகர் விஜயின் தங்கையாக மாறிய இலங்கைத் தமிழ்ப் பெண்!!

530

 
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டுள்ளது.

200 கோடி வசூலை நெருங்கியுள்ள மெர்சல் படம் பல எதிர்பார்ப்புகளின் மத்தியில் தீபாவளியன்று தினத்தன்று வெளியாகியது.

இந்தத் திரைப்படத்தில் இந்திய அரசாங்கத்தின் செயற்றிட்டங்களை விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மெர்சல் படத்தில் இலங்கை பெண் ஒருவரின் பங்களிப்பு காணப்பட்டது. சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த போதிலும், அது பலராலும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

மட்டக்களப்பை சேர்ந்த ஷனா மகேந்திரன் என்பவர் விமான நிலைய காவல் அதிகாரியாக நடித்திருந்தார். லண்டனில் தற்போது வசித்து வரும் ஷனா மகேந்திரன் சொந்தமாக மீடியா நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதுடன் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

மெர்சல் படத்தின் ஆரம்பத்திலேயே விஜய் பிரான்ஸ் நாட்டில் வந்து இறங்கியவுடன், அவரை பிரான்ஸ் பொலிஸார் சந்தேகத்துடன் பார்ப்பார்கள். உடனே அவரின் ஆடையை களைத்து பரிசோதனை செய்வார்கள். பிறகு விஜய் வைத்தியர் என்பதை தெரிந்துக்கொண்டு விட்டுவிடுவார்கள்.<
அப்போது ஒரு இலங்கை பெண் ‘அண்ணா மன்னித்து விடுங்கள்…அவர்களுக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன், உங்கள் உடையை பார்த்து அவர்கள் அப்படி நினைத்திருப்பார்கள்’ என்று ஆறுதல் கூறுவார்.

உடனே விஜய் ‘பரவாயில்லம்மா, கமல் சார், கலாம் சாருக்கே இதெல்லாம் நடக்கும் போது நாமெல்லாம் யார்?’ என்று கூறுவார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

மெர்சல் படத்தில் இவர் ஒரு காட்சியில் வந்து சென்றாலும், அந்த காட்சி வசனங்கள் மிகவும் வலுவாக இருந்ததால் எல்லோர் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.

இதேவேளை இலங்கையில் தயாரித்த மண் என்ற திரைப்படத்தில் ஷனா மகேந்திரன் கதாநாயகியாக அறிமுகமாகி நடித்திருந்தார். இந்தப்படம் 2004ம் ஆண்டு வெளியாகி இருந்தது.

மண் திரைப்படம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட போதிலும், பிரபலமான இந்திய தொழில்நுட்ப கலைஞர்கள் அதில் பணியாற்றி இருந்தனர்.

மண் திரைப்படத்தின் நடித்த ஷனா சிறந்த கதாநாயகியாக தெரிவு செய்யப்பட்டார். தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் பாலு மகேந்திராவும் ஒருவர் ஆவார். அவரும் மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.