மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் : விசாரணையில் அம்பலம்!!

680

புதுடெல்லியில் தன் மனைவியை கொன்றுவிட்டு கூலிப்படை கொன்றதாக நாடகமாடியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் பகர்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பங்கஜ் மெஹ்ரா, இவரது மனைவி பிரியா மற்றும் இரண்டு வயது மகனுடன் கடந்த செவ்வாய் அன்று ஷாலிமர் பாக் என்னும் பகுதிக்கு சென்றுள்ளார்.

அன்றைய தினம் இரவு இவர்கள் வீடு திரும்பிய போது அடையாளம் தெரியாத நபர்களால் பிரியா சுடப்பட்டதாக் கூறி மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார் பங்கஜ்.

ஆனால் ஏற்கனவே பிரியா இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்த பொலிசாரிடம் தான் வாங்கிய கடனுக்காக கடன் கொடுத்தவர்கள் கூலிப்படை மூலமாக தன் மனைவியை கொன்றுவிட்டதாகவும், தானும் தன் மகனும் மட்டும் உயிர் தப்பித்ததாகவும் பங்கஜ் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதனை நம்ப மறுத்த பொலிசார், பங்கஜிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் காவல்துறை இணை ஆணையர் மிலிந்த் கூறுகையில், பங்கஜ் தான் பிரியாவை கொன்றுவிட்டு அந்த பழியை கடன் கொடுத்தவர்கள் மீது விழுமாறு நாடகமாடியுள்ளார். மேலும் அவருக்கு இன்னொரு மனைவியும் இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.