வீட்டு வளாகத்தில் புகுந்த பாரிய முதலை!!

933

 
திருகோணமலை – சம்பூரில் குடியிருப்புக் காணியொன்றுக்குள் சுமார் 8 அடி நீளமான முதலை ஒன்று புகுந்துள்ளது.

இந்நிலையில், கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த முதலையை பாதுகாப்பாக மீட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளர் வெளியே வந்து பார்த்த போது, கிணற்றடியில் பாரிய முதலை ஒன்று இருப்பதை கண்டு சத்தமிட்டு, அயலவர்களை அழைத்துள்ளார்.

இதன் போது, முதலை ஓட முற்பட்டுள்ளது. எனினும், வீட்டின் முன்னால் உள்ள வடிகானுக்குள் முதலை வீழ்ந்தது.
இதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் முதலையை பாதுகாப்பாக மீட்டெடுத்துச் சென்றுள்ளனர்.