நகைக் கடையில் பெண்ணின் மோசமான செயல் : காணொளி மூலம் அம்பலம்!!

666

நாளுக்கு நாள் திருட்டு சம்பவம் அதிகரித்து வருகின்ற நிலையில், தற்போது பல்வேறு வர்த்தக நிலையங்களில் பாதுகாப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுகின்றது.

இந்த நிலையில்,பாதுகாப்பு கெமராவின் உதவியுடன் மற்றுமொரு திருட்டு சம்பவம் ஹங்குரன்கெத்தவில் பதிவாகியுள்ளது.

ஹங்குரன்கெத்த, ரிகில்லகஸ்கட பகுதியிலுள்ள நகை கடையொன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நகைக் கடை ஒன்றில் நகை வாங்க சென்ற பெண் ஒருவர் மோதிரங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கும் போது, தங்க மோதிரத்தை பைக்குள் வைத்து கொண்டு போலியான மோதிரத்தை கடை உரிமையாளரிடம் கொடுத்துள்ளமை காணொளி மூலம் அம்பலமாகியுள்ளது.

குறித்த திருட்டு சம்பவத்தை பாதுகாப்பு கமரா உதவியுடன் கடை உரிமையாளர் கண்கானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.