வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இரண்டு கிலோ ஹெரோயினுடன் யாழ்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை நேற்று (09.11.2017) மாலை 4 மணியளவில் வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் 2 கிலோ ஹெரோயினை பயணப்பொதியில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் ஒருவரை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.






