வவுனியாவில் வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

544

 
வவுனியா இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிஷேச சபையின் அனுசரணையில் பிரதான பிஷப் பி. என்.இராஜசிங்கம் (இ.பி.எம்) தலைமையில் நேற்று முன்தினம்(17.11) வவுனியா ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலயத்தில் 2018ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள 110 வசதியற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் வசதியற்ற வறுமைக்கோட்டில் வசிக்கும் 2018ஆம் ஆண்டு புலமைப்பரீட்சையில் தோற்றவுள்ள தெரிவு செய்யப்பட்ட 110 மாணவர்களுக்கு கற்றல் வழிகாட்டல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

வன்னிப்பிராந்திய சமுதாய பொலிஸ் பிரிவின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விற்கு இறம்பைக்குளம் ஈஷி பூரண சுவிசேச சபையின் அனுசரணையில் சென்ற விஷேட குழுவினரால் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வன்னிப்பிராந்திய சமூதாய பொலிஸ் பிரிவின் தலைமை அதிகாரி, உத்தியோகத்தர்கள், வவுனியா தெற்கு வலய கல்வி அதிகாரிகள், ஈரப்பெரியகுளம் மகாவித்தியாலயத்தின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.