வவுனியாவில் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஸ்­ணவி மறக்கப்பட்டார்?

1493

பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுக் கொலை செய்யப்­பட்ட எனது மகள் ஹரிஸ்­ண­விக்கு நீதி கிடைக்­க­வேண்­டும், அவ­ளு­டைய துய­ரச் சம்­ப­வம் மக்­கள் மனங்­க­ளில் இருந்து அகன்று வருகிறது என அவ­ரது தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து தெரிவித்த அவர், கண­வ­னைப் பிரிந்து வாழ்ந்த எனக்கு உத­வி­யாக எனது மகளே இருந்தார். இன்று அவர் இல்லை என்­பதை நினைத்­துப் பார்க்க முடியாதுள்ளது.

பாட­சா­லைக்­குப் போக­வில்லை என்று வீட்­டில் இருந்தவரை சட­ல­மா­கவே கண்­டேன். அவரைச் சிதைத்­த­வர்­கள் வெளி­யில் நட­மா­டு­கின்­ற­னர். அவருக்கு நீதி­ கி­டைக்­க­வில்லை.

ஹரிஸ்­ண­விக்­கா­கப் போரா­டி­வர்­க­ளு­டைய மனங்­க­ளில் இருந்து அவள் மெல்ல, மெல்ல வில­கு­கின்­றாள். குற்­ற­வா­ளி­கள் தப்­பித்துவிடக்­கூ­டாது. இது­போன்ற சம்­ப­வம் நடை­ பெ­றக் கூடாது என்­றால் ஹரிஸ்­ண­விக்கு நீதி கி்டைக்க வேண்­டும் என்று தெரிவித்தார்.

வவு­னியா உக்­கி­ளாங்­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்த மாணவி ஹரிஸ்­ணவி கடந்த 2016ம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 16ம் திகதி அவரது வீட்­டில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருந்­தார். அன்­றை­ய­தி­னம் பாட­சாலை செல்ல மறுத்து தனி­யாக இருந்த போதே அந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றி­ருந்­தது.

சிறப்பு விசா­ர­ணையை மேற்­கொண்ட அதி­காரி ஹரிஸ்ணவியின் உட­லில் நகக் கீறல் இருப்­ப­தா­க­வும், அவர் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­டுத்­தப்­ப­பட்­டுள்­ள­தா­க­வும் தெரிவித்­தார்.

சட­லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்கு உட்படுத்தப்­பட்­டது. சம்­ப­வத்­தின் பின்­னர் வவு­னியா உள்­ளிட்ட வடக்கு மாகா­ணம் எங்­கும் நீதி­கோ­ரிப் போராட்­டங்­கள் இடம்­பெற்­றன. குற்­ற­வாளி கைது செய்­யப்­ப­ட­வேண்­டும்,தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று பலத்த கோசங்­கள் எழுப்­பப்­பட்­டன.

ஆர்ப்­பாட்­டங்­க­ளின் பின்­னர் ஹரிஸ்­ணவி வீட்­டுக்கு, அயல் வீட்­டி­லுள்ள நபர் ஒரு­வர் பொலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­டார். நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளில் அவர் 6 மாதங்­களாக விளக்கமறிய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

பின்­னர் அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். ‘‘ஹரிஸ்­ண­வி­யின் வீட்­டா­ருக்கு எவ்­வித தொந்­த­ர­வும் கொடுக்­கக்­கூ­டாது’’ என்ற கடு­மை­யான உத்­த­ர­வு­டன் அவர் பி்ணையில் வெளி­வந்­தார். தொடர்ந்­தும் வழக்­கு­கள் இடம்­பெ­று­கின்­றன.

எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 29ஆம் திகதி அடுத்த தவணை வழக்கு இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பிடத்தக்கது.