வவுனியா திருநாவற்குளம் உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலைவிழா, மாணவர் கௌரவிப்பு!!

250

 
வவுனியா திருநாவற்குளம் உமா மகேஸ்வரன் முன்பள்ளியின் வருடாந்த கலை விழா மற்றும் மாணவர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று (11.12.2017) காலை 9.30 மணியளவில் முன்பள்ளி ஆசிரியை மீரா குணசீலன் தலைமையில் இடம்பெற்றது .

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் ஜி .ரி.லிங்கநாதன், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் உப நகர பிதா க.சந்திரகுலசிங்கம் , ராஜேஸ்வரன், அருள்வேல்நாயகி, பிரதி கல்விப் பணிப்பாளர் ரகுபதி, முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .

இதன் போது மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.