அனுமதி மறுக்கப்பட்டதால் மருத்துவமனை வளாக கால்வாயில் பிரசவித்த பெண்!!

324

ஓடிசா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் அருகாமையில் உள்ள கால்வாய்க்குள் அமர்ந்து கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தின் கோராபட் பகுதியில் ஒரு கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்வதற்காக சென்றுள்ளார்.

ஆனால் அவரிடம் போதிய ஆவணங்கள் இல்லாததால் அவரை அனுமதிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது.

இதையடுத்து அந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிற்றுண்டி சாலை அருகே இருந்த கால்வாயினுள் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து செய்தி அறிந்ததும் மருத்துவமனை நிர்வாகத்தினர் உடனடியாக சென்று அந்தப் பெண்ணையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்