வவுனியா, திருநாவற்குளத்தில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா, திருநாவற்குளம் பகுதியில் உள்ள வீட்டு காணி ஒன்றை துப்பரவு செய்தபோது வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அதனை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த மோட்டார் குண்டு செயலிழந்த நிலையிலேயே காணப்பட்டதாகவும், இதற்கு முன்னர் இந்த வீட்டினை விடுதலைப் புலிகள் அமைப்பினைச் சேர்ந்தவர்களும், அதனைத் தொடர்ந்து பொலிஸாரும் பயன்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.






