நான்கு வயது சிறுமிக்காக மிகப் பெரிய பென்சில் நிறுவனம் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

662

இடதுகை பழக்கம் கொண்ட நான்கு வயது சிறுமிக்கு ஏற்றவாறு பிரத்யேகமாக பென்சில் ஷார்ப்னரை முன்னணி பென்சில் நிறுவனம் தயாரித்து அனுப்பியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையை சேர்ந்த இஷா சிங் (4) என்ற சிறுமி இடதுகை பழக்கம் கொண்டவராவார். இதன் காரணமாக வலதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு ஏதுவாக தயாரிக்கப்பட்டிருக்கும் பென்சிலை இஷாவால் சீவ முடியவில்லை.

இந்நிலையில், இஷாவின் பிரச்சனை குறித்து அவர் தாய் ஸ்வேதா பிரபல பென்சில் நிறுவனமான ஹிந்துஸ்தானுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.

அதில் இடதுகை பழக்க்ம் கொண்ட தனது மகளை போல உள்ளவர்களுக்கு பிரத்யேகமாக பென்சில் ஷார்ப்னர் தயாரிக்கலாமே என ஆலோசனை கூறியிருந்தார்.

அவரின் வேண்டுகோளை மதித்து ஹிந்துஸ்தான் நிறுவனம் இடதுகை பழக்கம் கொண்டவர்கள் பயன்படுத்தும் வகையிலான ஐந்து ஷார்பனர்களை தயாரித்து இஷாவுக்கு அனுப்பியுள்ளது.

இதோடு, உங்கள் மகள் இனி எளிதில் பென்சில் சீவிக்கொள்வார் என தாங்கள் நம்புவதாகவும், இதை தொடர்ந்து நீடிக்க முயற்சிப்பதாகவும் கடிதம் எழுதியுள்ளது.

இந்த கடிதத்தை ஸ்வேதா பேஸ்புக்கில் பதிவிட அது வைரலாகியுள்ளது.