கோவையை சேர்ந்த தொழிலதிபரின் 19 வயது கோடீஸ்வர மகன் துறவறம் பூண்டுள்ளார்.
மனோஜ் ஜெயின் என்ற தொழிலதிபரின் மகன் நிமிட்ஸ் (19) குருகுல கல்வி பட்டம் பெற்றுள்ளார். இவர் துறவம் பூண்ட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
நிமிட்ஸ் ஊர்வலமாக தேரில் அழைத்து வரப்பட்டார். அப்போது ஜெயின் சமூக பெண்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடியபடி தெருக்களில் சென்றன. ஊர்வலம் சென்ற பாதையில் உள்ள தெருக்களை ஜெயின் சமூக பெண்கள் சுத்தம் செய்த வண்ணம் சென்றனர். மேலும் ஊர்வல பாதையில் பால், தண்ணீர் தெளிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஜெயின் சமூக ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
கோவையில் இருந்து சூரத் செல்லும் நிமிட்ஸ் வருகிற 27 ஆம் திகதி அங்கு நடக்கும் நிகழ்ச்சியில் துறவறம் மேற்கொண்ட பின்னர் மீண்டும் கோவை திரும்புகிறார்.
துறவறம் பூண்ட பின்னர் சொகுசு வாழ்க்கை வாழக்கூடாது, வீட்டில் தங்ககூடாது, கோவிலில் தான் தங்க வேண்டும். தானே தான் சமைத்து சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் தர்மம் எடுத்து சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.