உலகிலேயே முதன்முறையாக மரத்தன் போட்டியில் பங்கேற்று பரிசு வென்ற அமெரிக்காவைச் சேர்ந்த நாய் பூகி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது.
இம்மாதம் 5ஆம் திகதி தனது உரிமையாளர் வீட்டில் இருந்து காணாமல் போன 10 வயது பூகி இண்டியானாவில் மரத்தன் போட்டி நடைபெற்ற இவான்ஸ்வில்லி என்ற இடத்துக்கு வந்தது.
மரத்தன் போட்டியாளர்களைப் பார்த்து ஆவலுடன் தானும் கலந்துகொண்டது. உரிமையாளரின் துணையின்றி 20.9 கி.மீ தூரத்தை 2 மணி 15 நிமிடங்களில் கடந்து மரத்தன் பரிசை வென்று ஒரே நாளில் உலகப்புகழ் பெற்றது.
இதைத்தொடர்ந்து விலங்குகள் காப்பகத்திற்கு அந்த நாய் எடுத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகே, நாயின் உரிமையாளர் ஜெர்ரி பட்ஸஸக்கு, தனது நாய் மரத்தனில் பங்கேற்று பரிசு பெற்றது தெரியவந்தது.
இந்நிலையில் உலகின் கவனத்தைக் கவர்ந்த பூகி என்ற அந்த நாய், கடந்த 15ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தது.
இது குறித்து அதன் உரிமையாளர் ஜெர்ரி பட்ஸ் பேஸ்புக் இணையத்தில் பூகியின் ஒவ்வொரு நிமிட அசைவையும் நேசித்தேன் என்று அதன் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளதாக நியூயார்க் டெய்லி நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.





