வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமாக மரணம்!!

829

வவுனியா மருக்காரம்பளை கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சிவகுமார் கஜந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு மர்மமாக மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் நேற்று இரவு 8.30 மணியளவில் தனது வீட்டில் திடீரென தன் தந்தையை அழைத்து தான் விஷம் அருந்தியுள்ளதாக கூறியதையடுத்து உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதித்ததும் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவருடைய மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.‌