வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (27.12.2017) இரவு 7 மணியவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து வைரவப்புளியங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள இலங்கை வங்கிக்கு அருகே மற்ரொரு முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இவ் விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











