மதுபான விற்பனை தொடர்பில் அண்மையில் வௌியிடப்பட்ட வர்த்தமானியை மீளப் பெற அமைச்சரவை ஏகமனதாக அனுமதியளித்துள்ளது. அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மதுபானம் விற்பனை செய்யும் நேரத்தை அதிகரித்தல் மற்றும் பெண்கள் மதுபான கொள்வனவில் ஈடுபடுவது, மதுபான விற்பனை, தயாரிப்பு நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துதல் போன்றவற்றுக்கு இருந்த தடையை நீக்குதல் தொடர்பில் அண்மையில் சட்டத் திருத்தங்கள் கொண்டுவரவுள்ளதாக நிதி அமைச்சு தெரியப்படுத்தியது.
எனினும், இந்த திருத்தம் குறித்து தான் அறிந்திருக்கவில்லை என, அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கருத்து வௌியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.






