இரு பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த விபரீதம்!!

826

 
மட்டக்களப்பு – வாழைச்சேனை, பேருளாவெளி பகுதியில் இன்று காலை காட்டு யானை தாக்கி இரு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் தம்பிமுத்து கந்தசாமி எனும் 55 வயது நபரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்படுள்ளது.

குறித்த நபர் தனது வயலுக்குள் இருந்து சேனைக்குடிலுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியுள்ளது.

இதனையடுத்து அந்த இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று மரண விசாரணை தொடர்பாக அறிக்கையிட்டுள்ளார்.

இதன் பின்னர் சடலம் வாழைச்சேனை வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் வைத்திய விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.