யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்துடன் மோதுண்டு பாடசாலை மாணவியொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த அனர்த்தம் காரணமாக இரு பசுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரிக்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ். மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த துரைசிங்கம் கீர்த்திகா (வயது 15) என்ற மாணவி படுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
புகையிரதத்தில் மோதுண்ட பசு மாடுகள் பல மீற்றருக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளன.
வீசப்பட்ட பசுக்கள் வீதியோரத்தில் நின்ற மாணவி மீது மோதுண்டதனால் மாணவி தரையில் வீழந்து படுகாயம் அடைந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.







