வெளிநாடொன்றில் மர்ம கொலை : சந்தேகநபர்களான இலங்கையர்கள் தப்பியோட்டம்!!

487
வெளிநாடு ஒன்றில் நபர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு இலங்கையர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டுபாய் Al Badda பகுதியில் அறை ஒன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் மீதே கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தனது அறையில் தங்கிருந்த நபரை கொலை செய்து விட்டு குறித்த இலங்கையர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு டுபாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Al Badda பகுதியில் இருந்து டுபாய் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பொன்று கிடைத்துள்ளது. தாம் தங்கியுள்ள குடியிருப்பில் துர்நாற்றம் வீசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். இதன் போது, அந்த அறை மூவரால் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

தான் தொழிலுக்கு சென்று வீடு திரும்பும் போது இந்த துர்நாற்றம் வீசியதாக குறித்த நபர் குறிப்பிட்டவுடன், பொலிஸார் அந்த அறையை திறந்து பார்த்துள்ளனர். அங்கு சுமார் 50 வயதுடைய நபரின் சடலம் இரத்தம் காய்ந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அவரின் வயிறு மற்றும் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தப்பட்டுள்ளதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளில் அந்த கொலை சம்பவம் இடம்பெற்று 9 நாட்கள் கடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபருடன் இரண்டு இலங்கையர்கள் அறையை பகிர்ந்து கொண்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்காலிக விசாவில் குறித்த இலங்கையர்கள் டுபாய் சென்று பணியாற்றியுள்ளனர். இதன் போது அவர்களின் விசா காலாவதியாகியுள்ள நிலையில், மூவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் கொலை வரை சென்றிருக்கலாம் என அந்த குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த நபரின் தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்களை குறித்த இலங்கையர்கள் திருடியதுடன் நாட்டை விட்டு தப்பி சென்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையர்களை கைது செய்வதற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.