இளம் பெண்ணின் சடலம் நீர்த்தேகத்திலிருந்து மீட்பு!!

469

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகாமையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட இச் சடலத்தை மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே காசல்ரீ பிரிதேசத்தில் 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காணாமல்போய் உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த சடலம் காணாமல் போனதாக கருதப்படும் பெண்ணுடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் தற்கொலை செய்து கொண்டரா அல்லது கொலை செய்யப்பட்டு நீர் தேக்கத்தில் எறியப்பட்டுள்ளாரா என்பது தொடர்பாக பொலிஸார் புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.