வெளிநாடு செல்ல முயற்சித்த தாய், மகள் உட்பட நால்வர் கட்டுநாயக்கவில் கைது!!

541
சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி வீசாவை பயன்படுத்தி ஒஸ்ரியா செல்ல முயற்சித்த ஈரான் நாட்டை சேர்ந்த 4 பேரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் போலி வீசாக்களை கொண்ட கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகள், மகன் மற்றும் பேரன் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 23ம் திகதி சுற்றுலா வீசா மூலம் இலங்கை வந்த ஈரானியர்கள், வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.