மாமியாரை பொல்லால் அடித்துக் கொலை செய்த மருமகன் தலைமறைவு!!

1061

 
நாவலபிட்டி நவ திஸ்பன கிராம பகுதியில் மாமியாரை பொல்லால் அடித்து கொலை செய்து விட்டு தலைமறைவாகியுள்ள மருமகனை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்மணி அனுலாவத்தி வயது 65 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியளவில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகன், மாமியாரை மண்வெட்டி கணையினால் தாக்கியுள்ளார். காயமடைந்த மாமியார் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய மருமகனை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.