இலங்கையில் ஒரே நேரத்தில் தென்பட்ட சுப்பர் மூன் மற்றும் பூரண சந்திர கிரகணம்!!

597

 
சுப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிதான சந்தர்ப்பம் இன்று இலங்கையர் அனைவருக்கும் கிடைத்தது.

152 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளிப் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த சந்திர கிரகணம் நேற்று (31.01) பிற்பகல் 4.21 முதல் தென்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

36 ஆண்டுகளுக்கு பின்னரே சுப்பர் மூன் தென்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.